தொழில்நுட்பம்

ஏர்டெல் ரூ.199 ரீசார்ஜ் செய்தால் ரூ.75 கேஷ்பேக் பெறலாம்

Published On 2018-08-29 07:04 GMT   |   Update On 2018-08-29 07:04 GMT
ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் ரூ.199 சலுகைக்கு ரீசார்ஜ் செய்யும் போது ரூ.75 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. #offers



இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக அறியப்படும் போன்பெ ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

அதன்படி போன்பெ ஆப் மூலம் ரூ.199 பிரீபெயிட் ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.75 கேஷ்பேக் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைஏர்டெல் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்து, போன்பெ வாலெட் மூலம் பணம் செலுத்துவோருக்கும் கேஷ்பேக் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் வழங்கும் ரூ.199 சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (உள்ளூர் மற்றும் வெளியூர்), இலவச ரோமிங் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரூ.199 சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

இந்த சலுகையின் கீழ் ஏர்டெல் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மாதம் ரூ.25 கேஷ்பேக் ஆகஸ்டு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கான கேஷ்பேக் தொகை போன்பெ வாலெட் / கிஃப்ட் வவுச்சர் பேலென்ஸ் / போன்பெ அக்கவுன்ட் மூலம் பெற முடியும். 
Tags:    

Similar News