உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே மரத்தில் லாரி மோதி விபத்து
லாரி ஓட்டுனர் காயமடைந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பல்லடம்:
பொள்ளாச்சியில் இருந்து இளநீர் லோடு ஏற்றிக்கொண்டு திருப்பூரை நோக்கி சரக்கு லாரி சென்றது. பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வெங்கிட்டாபுரம் அருகே செல்லும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் லாரி ஓட்டுனர் காயமடைந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.