செய்திகள்
கோப்பு படம்

குடற்புழு நோயால் குட்டி யானை பலி

Published On 2019-08-22 12:23 GMT   |   Update On 2019-08-22 12:23 GMT
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் குடற்புழு நோயால் ஆண் குட்டி யானை இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
டி.என்.பாளையம்:

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட கடம்பூர் கிழக்கு காவல் சுற்று பகுதியில் ஒரு ஆண் குட்டி யானை இறந்து கிடந்தது.

டிஎன்.பாளையம் வனசரக காப்பாளர்கள் டி.என்.பாளையம் வகுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கூட்டரைப்பள்ளம் என்ற வனப்பகுதியில் 2 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. அந்த யானையின் உடல் மீட்கப்பட்டது.

இந்த யானை குட்டியை சதாசிவம் மருத்தவ குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் குடல் புழு நோயால் யானை இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் கூறினர்.

யானை குட்டியின் குடல் புழு மாதிரிகளை கோவையில் உள்ள தடயவியல் மருத்துவ ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மருத்துவ ஆய்வுக்கு பின்பே யானை குட்டி எப்படி இறந்தது என்று தெரியும் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News