செய்திகள்
போக்குவரத்து மந்திரி மூல்சந்த் சர்மா

முதல்-மந்திரியை தொடர்ந்து அரியானா மந்திரிக்கு கொரோனா தொற்று

Published On 2020-08-25 22:35 GMT   |   Update On 2020-08-25 22:35 GMT
அரியானா மாநில போக்குவரத்து மந்திரி மூல்சந்த் சர்மாவுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியாகி உள்ளது.
சண்டிகார்:

அரியானா மாநில பாரதீய ஜனதா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி, சண்டிகர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.அந்த மாநில சட்டசபை சபாநாயகர் கியான் சந்த் குப்தாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த மாநில போக்குவரத்து மந்திரி மூல்சந்த் சர்மாவுக்கும் (வயது 56) கொரோனா தொற்று நேற்று உறுதியாகி உள்ளது.

இை-யொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி என அறிக்கை வந்துள்ளது. எனவே என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். எனக்கு அறிகுறிகள் ஏதுமில்லை. என்னோடு கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்வதுடன், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுங்கள்” என கூறி உள்ளார்.

அரியானாவில் இன்று (புதன்கிழமை) சட்டசபை கூடுகிற தருணத்தில் முதல்-மந்திரி, சபாநாயகர் மற்றும் போக்குவரத்து மந்திரிக்கு கொரோனா என்பது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News