செய்திகள்
தற்கொலை

தர்மபுரி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2021-11-21 12:34 GMT   |   Update On 2021-11-21 12:34 GMT
தர்மபுரி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி எம்.ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். (வயது 55). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய தற்கொலை குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News