செய்திகள்
கோப்புபடம்.

தாராபுரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்- வருகிற 30ந்தேதி நடக்கிறது

Published On 2021-11-25 07:09 GMT   |   Update On 2021-11-25 07:09 GMT
முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள மகாராணி கலை, அறிவியல் கல்லூரியில் வருகிற 30-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து மாவட்ட கலெக்டர்  எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

திருப்பூர்மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மகளிர்திட்டம் ஆகியன இணைந்து தாராபுரத்தில் உள்ள மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் வருகிற 30-ந்தேதி  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. 

இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்யவுள்ளனர். 

இதில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்- 2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ. தொழிற் பயிற்சி முடித்தவர்கள், செவிலியர், பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், கணினி ஆபரேட்டர்கள், ஓட்டுநர்கள், தையல் கலைஞர்கள் என அனைத்து விதமான தகுதியாளர்களும் பங்கேற்கலாம்.

இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்க இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதே வேளையில் வேலை தேடும் நபர்களும் இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மகளிர் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புகளுக்கான பதிவுகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக்கடன் குறித்த வழிகாட்டுதலுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0421-2999152, 94990-55944 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News