செய்திகள்
ராஜ்நாத் சிங்

விரைவு எதிர்வினை ஏவுகணை சோதனை மீண்டும் வெற்றி - ராஜ்நாத் சிங் பாராட்டு

Published On 2020-11-17 18:28 GMT   |   Update On 2020-11-18 01:21 GMT
இரண்டாவது முறையாக நடத்திய விரைவு எதிர்வினை ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
புதுடெல்லி:

தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான விரைவு எதிர்வினை ஏவுகணை சோதனையில் திட்டமிடப்பட்ட இலக்கை ஏவுகணை தாக்கி அழித்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று தெரிவித்தது.

வான்பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 2 ரேடார் அமைப்பு பொருத்தப்பட்ட ஏவுகணை கடந்த 5 நாள்களுக்குள் 2-வது முறையாக சோதிக்கப்பட்டு வெற்றி அடைந்துள்ளது.

முன்னதாக ,கடந்த வெள்ளிக்கிழமை இதே வகையிலான ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இரண்டாவது முறையாக நடத்திய விரைவு எதிர்வினை ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
Tags:    

Similar News