தமிழ்நாடு
தற்கொலை

சிப்காட் அருகே அண்ணி திட்டியதால் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை

Published On 2021-12-03 11:44 GMT   |   Update On 2021-12-03 11:53 GMT
சிப்காட் அருகே அண்ணி திட்டியதால் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள லாலாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 28). இவர் சரிவர வேலைக்கு செல்லாததால், அவரை, அவரது அண்ணி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி, வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News