லைஃப்ஸ்டைல்
வேர்க்கடலை சுண்டல்

நவராத்திரி பிரசாதம்: வேர்க்கடலை சுண்டல்

Published On 2020-10-22 04:57 GMT   |   Update On 2020-10-22 04:57 GMT
வேர்க்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வேர்கடலை சேர்த்து நவராத்திரி நைவேத்தியம் சத்தான சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சமைக்க தேவையானவை

வேர்க்கடலை - 1 கப்,
பச்சை மிளகாய் - 2
 கொத்தமல்லி - சிறிதளவு,
இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன்,
சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வேர்கடலையை  ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

முதலில் ஒரு மணி நேரம் ஊற வைத்த வேர்க்கடலையை உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்கவும்.

எண்ணெயை சூடாக்கி, சீரகம், சோம்பு, பச்சை மிளகாய் தாளிக்கவும்.

இதனுடன் இஞ்சித் துருவல், வெந்த வேர்க்கடலை சேர்க்கவும்.

நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

வேர்க்கடலை சுண்டல் தயார்

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News