செய்திகள்
5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ள கடலோர மாவட்டங்கள்
திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் கனமழையும், நாளை திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பகலில் தெளிவாக காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் மனம் பூண்டி, கலசப்பாக்கம் தலா 16 செ.மீ., திருக்கோவிலூர் 11, கீழ்பென்னாத்தூர் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 25-ந்தேதி வரை 5 நாட்களுக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.
இன்று திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் கனமழையும், நாளை திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பகலில் தெளிவாக காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் மனம் பூண்டி, கலசப்பாக்கம் தலா 16 செ.மீ., திருக்கோவிலூர் 11, கீழ்பென்னாத்தூர் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... பிரதமர் திட்டத்தை செயல்படுத்த குழு அமைப்பு- தமிழக அரசு தகவல்