செய்திகள்
சூளகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
சூளகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி போலீசார் கே.கே.நகர் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு பணம் வைத்து சூதாடிய ஏனுசோனையைச் சேர்ந்த மஞ்சுநாத் (வயது 54), ஜோகிர்பாளையம் கதிர்வேல் (44), வெப்பாலப்பள்ளி வேணு (27), சூளகிரி கே.கே.நகரைச் சேர்ந்த மஞ்சுநாத் (35) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.