செய்திகள்
ரோகித் சர்மா, விராட் கோலி

ரோகித் சர்மாவுக்கு 'கட்டம்கட்ட' பிளான் போட்ட விராட் கோலி- வெளியான அதிர்ச்சித் தகவல்

Published On 2021-09-17 13:13 GMT   |   Update On 2021-09-17 13:13 GMT
விராட் கோலி, டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக கூறினார்.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலிக்கும், அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மாவுக்கும் இடையில் உரசல் போக்கு நிலவி வருவதாக வெகு நாட்களாக சொல்லப்பட்டு வருகிறது.

இதை பிசிசிஐ தரப்பும் இந்திய அணி நிர்வாகமும் தொடர்ந்து மறுத்து வந்தாலும், இந்த விஷயம் சார்ந்து வரும் தகவல்கள் அதிர்ச்சியைக் கிளப்பிய வண்ணம் இருக்கின்றன. அப்படி ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது.

இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ரோகித். அப்படி ரோகித் செயல்படக் கூடாது என்றும், அவருக்கு வயது அதிகமாகி விட்டதால் அந்த பொறுப்பிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்றும் விராட் கோலி, அணித் தேர்வாளர்களிடம் சொன்னதாக தகவல் கசிந்துள்ளது.

ஒருநாள் அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்து கே.எல்.ராகுல் ஒருநாள் அணிக்குத் துணை கேப்டனாகவும், ரிஷப் பண்ட் டி20 அணிக்கு துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட வேண்டும் என்று கோலி, தேர்வாளர்களுக்கு ஆலோசனை கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

நேற்று விராட் கோலி, டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக கூறினார். இந்நிலையில் இப்படியொரு தகவல் வந்துள்ளது இந்திய அணியில் வெளியில் தெரியாமல் பிரச்சனை புகைந்து வருகிறதோ என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

Tags:    

Similar News