செய்திகள்
விபத்து

கொளத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலி

Published On 2021-01-14 07:30 GMT   |   Update On 2021-01-14 07:30 GMT
கொளத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொளத்தூர்:

கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலை பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகலிங்கம் (வயது 17), சிவா (17), மஞ்சுநாத் (17). நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கொளத்தூருக்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது காரைக்காடு அருகே சென்றபோது சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. 

இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் நாகலிங்கம் வழியிலேயே இறந்தார். சிவா, மஞ்சுநாத் ஆகிய 2 பேரும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த விபத்து குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News