செய்திகள்
கோப்புப்படம்

பொங்கல் சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்

Published On 2020-01-11 10:49 GMT   |   Update On 2020-01-11 10:49 GMT
பொங்கல் பண்டிகை முன்னிட்டு, வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
வேலூர்:

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் 14-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, வேலூர் வழியாக பிறபகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, சென்னையிலிருந்து வேலூர் மற்றும் வேலூர் மார்க்கத்தில் அமைந்துள்ள பிற பகுதிகளான திருப்பத்தூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், தர்மபுரி ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

நாளை முதல் 14-ந் தேதி வரை இயக்கப்படும் என்று வேலூர் மண்டல பொது மேலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News