செய்திகள்
கம்பைநல்லூர் அருகே மது விற்ற 2 பேர் கைது
கம்பைநல்லூர் அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரப்பூர்:
கம்பைநல்லூர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குண்டல்பட்டி பகுதியில் மதுபானங்களை வீடுகளில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற ஞானம் (வயது 39), ராஜேந்திரன் (38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.