ஆன்மிகம்
தடிக்காரன்கோணம் பனிமய மாதா ஆலய விழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

தடிக்காரன்கோணம் பனிமய மாதா ஆலய திருவிழா தொடங்கியது

Published On 2019-08-03 04:23 GMT   |   Update On 2019-08-03 04:23 GMT
தடிக்காரன்கோணம் புனித பனிமய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
தடிக்காரன்கோணம் புனித பனிமய மாதா ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. விழா வருகிற 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நேற்று மாலை திருக்கொடி பவனி, கொடியேற்றம், ஆடம்பர திருப்பலி, மறையுரை, இரவு கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடந்தது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, இரவு திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

வருகிற 10-ந் தேதி காலை 8 மணிக்கு ஆடம்பர திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெறும். தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

திருவிழாவின் இறுதி நாளான 11-ந் தேதி காலை 10 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி, மதியம் 1 மணிக்கு அன்பின் விருந்து, இரவு நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர்கள், பங்குமக்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News