செய்திகள்
அரிவாள் வெட்டு

வத்திராயிருப்பு அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு

Published On 2021-10-25 11:08 GMT   |   Update On 2021-10-25 11:08 GMT
வத்திராயிருப்பு அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் திவான் (வயது 22). சம்பவத்தன்று இவரும், உறவினர் ஜீவா என்பவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.

அங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலை அருகே சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த சின்னத் துரை, மண்டையன் உள்பட 4 பேர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது மோதலாக வெடித்தது.

4 பேரும் திவானை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்தபுகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News