ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் கூட்டம்.

4 நாட்களுக்கு பின்னர் திறப்பு: திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

Published On 2021-09-21 06:07 GMT   |   Update On 2021-09-21 06:07 GMT
இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து கிரிவலம் செல்வார்கள்.

தற்போது கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 10 மணி வரை பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதன் பின்னர் போலீசார் பக்தர்கள் கிரிவலம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனால் சாலை ஓரங்களில் பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கட்கிழமை என 4 நாட்களாக மூடப்பட்டிருந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இன்று காலை பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.

இதனால் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News