செய்திகள்
கைது

ஜோலார்பேட்டையில் ரெயிலில் மது பாக்கெட்டுகள் கடத்திய 2 பேர் கைது

Published On 2021-06-06 11:20 GMT   |   Update On 2021-06-06 11:20 GMT
சோளிங்கர் பகுதிக்கு மதுபாக்கெட்டுகள் கடத்தி வந்ததும் தெரிந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்தபோலீசார், அவர்களிடமிருந்து 162 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஜோலார்பேட்டை:

கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் கடந்த மாதம் (மே) 10-ந் தேதி முதல் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ரெயில்களில் மது பாக்கெட்டுகளை கடத்தி வந்து விற்பனை செய்கிறார்கள். இந்த நிலையில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சோதனை செய்தனர். சந்தேகத்தின்பேரில் அதில் இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த முனியப்பா (வயது 40), மாரிமுத்து மகன் முருகன் (27) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் சோளிங்கர் பகுதிக்கு மதுபாக்கெட்டுகள் கடத்தி வந்ததும் தெரிந்தது. அதைத்தொடர்ந்து அவர்களைகைது செய்தபோலீசார், அவர்களிடமிருந்து 162 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News