ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்டமான கொலு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்டமான கொலு

Published On 2020-10-19 02:24 GMT   |   Update On 2020-10-19 02:24 GMT
நவராத்திரி விழாவையொட்டி உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி விழாவையொட்டி உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 அடி நீளம், 30 அடி அகலம், 30 அடி உயரத்தில் 21 படிகள் அமைக்கப்பட்டு அதில் ஆயிரக்கணக்கான பொம்மைகளை கொண்டும், இதிகாச, புராண கருத்துகளை எடுத்துக்கூறும் வகையில் கலை நயத்துடனும் கொலு அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News