உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆசிரியை, மாணவிகளுக்கு கொரோனா

Published On 2022-01-13 08:00 GMT   |   Update On 2022-01-13 08:00 GMT
ஆரணியில் 2 ஆசிரியை மற்றும் 18 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆரணி:

ஆரணி  டவுன்  கோட்டை வீதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றன. இதில் பள்ளி தலைமையாசிரியர் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

10&ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று முன்தினம் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழு கொரோனா பரிசோனை மேற்கொண்டனர்.

இதில் 2 ஆசிரியை மற்றும் 18 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. பாதிக்கபட்டவர்கள் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்ள சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கபட்டது. இன்று முதல் பொங்கல் பண்டிகை விடுமுறையால் பள்ளி மூடப்பட்டது.
Tags:    

Similar News