செய்திகள்
பணம் பறிப்பு

டாஸ்மாக் பார் நடத்துபவரை மிரட்டி பணம் பறிப்பு

Published On 2021-03-12 12:53 GMT   |   Update On 2021-03-12 12:53 GMT
டாஸ்மாக் பார் நடத்துபவரை மிரட்டி பணம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சிவகாசி அருகே உள்ள மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் முனிசெல்வம் (வயது 39). இவர் சிவகாசியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இவர் தனது பாருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சாட்சியாபுரத்தை சேர்ந்த அழகுராஜா (22) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி முனிசெல்வத்திடம் இருந்து ரூ.1300-யை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து அழகுராஜாவை கைது செய்தனர். இதே போல் சிவகாசி அண்ணாகாலனியை சேர்ந்த பிரபு (30) என்பவர் பராசக்தி காலனியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகுளம் கண்மாய் பகுதியில் நடந்த சென்ற போது அங்கு வந்த கொங்கலாபுரத்தை சேர்ந்த கண்ணன் (23) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பிரபுவிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் முருகனை பிடித்து சிவகாசி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News