கார்
இந்தியாவில் அறிமுகமாகவுள்ள பறக்கும் கார்கள்- மக்களே ரெடியா?
வரும் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கண்காட்சியில் பறக்கும் டாக்சிகளையும் ஸ்கைடிரைவ் நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ளது.
உலகில் உள்ள பெரும் நிறுவனங்கள் பறக்கும் வாகனங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஊபர் ஏர், ஏர்பஸ், ஹுண்டாய், போயிங் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே சோதனை அளவில் பறக்கும் கார்களை தயாரிக்க தொடங்கிவிட்டன.
இந்நிலையில் தற்போது ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான சுஸூகி, ஸ்கைடிரைவ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் மின்சார கார்களை தயாரித்து இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இரண்டு பேர் அமரும் வகையில் பறக்கும் மின்சார கார்களை அதிக அளவில் உற்பத்தி செய்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளது.
மேலும் வரும் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கண்காட்சியில் பறக்கும் டாக்சிகளையும் ஸ்கைடிரைவ் நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ளது.