செய்திகள்
கைது

தேன்கனிக்கோட்டை அருகே மது கடத்தியவர் கைது

Published On 2021-09-22 20:34 GMT   |   Update On 2021-09-22 20:34 GMT
தேன்கனிக்கோட்டை அருகே மது கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் ஜவளகிரி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்த போது அவர் இருதுகோட்டை திருமாநகரை சேர்ந்த மல்லேஷ் (வயது 35) என்பதும், 403 மதுபான பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மது பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News