செய்திகள்
கைது

கெலமங்கலத்தில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Published On 2019-09-20 14:17 GMT   |   Update On 2019-09-20 14:17 GMT
கெலமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை கைது செய்தனர்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தொட்டேகானபள்ளி கிருஷ்ணப்பா என்பவருடைய பலாமரம் தோட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு 2 பேர் விற்பனை செய்து கொண்டிருந்ததாக அதே பகுதியை சேர்ந்த எல்லப்பா (வயது33), கணேசகாலனியை சேர்ந்த முனிராஜ் (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு கட்டுகளும், 4 ஆயிரத்து 760 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News