செய்திகள்
விபத்து பலி

பர்கூர் அருகே வாகனம் மோதி ஒருவர் பலி

Published On 2021-09-06 04:40 GMT   |   Update On 2021-09-06 04:40 GMT
பர்கூர் அருகே வாகனம் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:

பர்கூர் அருகே கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அண்ணா நகர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் இறந்த நபர் குறித்தும், அவர் மீது மோதிய வாகனம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News