ஆன்மிகம்
சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்
திருச்சி ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் புரட்டாசி மூல நட்சத்திர தினத்தையொட்டி, சுதர்சன ஹோமம், ஸ்தல பரம்பரை அர்ச்சகர் சுரேஷ் என்ற செந்தாமரைக்கண்ணன் தலைமையில் நடந்தது.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே, பாரதிதாசன் சாலையில் ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் நேற்று புரட்டாசி மூல நட்சத்திர தினத்தையொட்டி, சுதர்சன ஹோமம், ஸ்தல பரம்பரை அர்ச்சகர் சுரேஷ் என்ற செந்தாமரைக்கண்ணன் தலைமையில் நடந்தது.
தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, சஞ்சீவி ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, சஞ்சீவி ஆஞ்சநேயரை வழிபட்டனர்.