வழிபாடு
காரகுப்பம் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்து 48 நாள் மண்டல பூஜை நடந்தது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
காரகுப்பம் கிராமத்தில் கங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்து 48 நாள் மண்டல பூஜை நடந்தது. இதில் இறுதி நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கடவரப்பள்ளி, கத்திரிப்பள்ளி, நாச்சிகுப்பம், திம்மசந்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் கடவரப்பள்ளி, கத்திரிப்பள்ளி, நாச்சிகுப்பம், திம்மசந்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.