செய்திகள்
கொள்ளை

பாளை அருகே வீட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகைகள் கொள்ளை

Published On 2021-07-21 12:44 GMT   |   Update On 2021-07-21 12:44 GMT
பாளை அருகே வீட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

பாளை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் தெய்வநாயகம் (வயது47). இவர் வியாபார வி‌ஷயமாக கடந்த 17-ந்தேதி சென்னை சென்று விட்டார்.

இவரது குடும்பத்தினரும் உறவினர் வீட்டுக்குசென்று விட்டனர். இந்த நிலையில் அவரது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் முன்பக்க கதவு, பீரோ ஆகியவற்றை உடைத்து அங்கிருந்த வளையல்கள், கம்மல்கள், மோதிரம் உள்ளிட்ட 5 பவுன் தங்க நகைகளையும் ஏராளமான வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

நேற்று வீடு திரும்பிய தெய்வநாயகம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இதுகுறித்து தெய்வ நாயகம் சிவந்திப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகைகளையும் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News