செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 உயர்வு

Published On 2021-04-07 06:13 GMT   |   Update On 2021-04-07 06:13 GMT
சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து, ரூ.34 ஆயிரத்து 376-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.39 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 297 ஆக உள்ளது.
சென்னை:

தங்கம் விலையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்ற-தாழ்வு காணப்பட்டு வந்த நிலையில் தற்போது விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 2-ந்தேதி தங்கம் பவுன் மீண்டும் ரூ.34 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை உயர்ந்த படியே இருந்து வருகிறது.

இந்த நிலையில் தங்கம் விலையில் இன்றும் உயர்வு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.312 உயர்ந்து, ரூ.34 ஆயிரத்து 376-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.39 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 297 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.70 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.50-க்கு விற்கிறது.
Tags:    

Similar News