செய்திகள்
முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி கிராமத்தில் சுகாதாரத்துறை சார்பில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தர்மலிங்கம் தலைமையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ஒருவருக்கு ரூ.200 வீதம் மொத்தம் 13 பேருக்கு ரூ.2,600 அபராதமாக விதிக்கப்பட்டது. ஆய்வின்போது சுகாதார துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.