செய்திகள்
பிரதமர் மோடி

பீகார் சட்டசபை தேர்தல் - பிரதமர் மோடி இன்று பிரசாரம் தொடக்கம்

Published On 2020-10-22 20:34 GMT   |   Update On 2020-10-22 20:34 GMT
பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
புதுடெல்லி:

பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பீகார் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.

பீகாரின் நகர் மற்றும் கிராமங்களில் 2022-ம் ஆண்டுக்குள் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

பீகாரில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

பீகாரின் சசாரம், கயா மற்றும் பாகல்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
Tags:    

Similar News