ஆன்மிகம்
நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு தடை
தற்போது கொரோனா தொற்றுநோய் மேலும் தீவிரமாக அதிகரித்து வருவதாலும், திருவிழாக்கள் மற்றும் மத கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்தொற்றை தடுக்க மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச்சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில், 144 ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் உள்ளதாலும், தற்போது கொரோனா தொற்றுநோய் மேலும் தீவிரமாக அதிகரித்து வருவதாலும், திருவிழாக்கள் மற்றும் மத கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் இந்த ஆண்டு 18-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் 16-ந் தேதி வரை நடக்க இருந்த திருத்தேர், செடில் திருவிழா உள்ளிட்ட, ஆண்டுத்திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த தடை உத்தரவுக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் இந்த ஆண்டு 18-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் 16-ந் தேதி வரை நடக்க இருந்த திருத்தேர், செடில் திருவிழா உள்ளிட்ட, ஆண்டுத்திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த தடை உத்தரவுக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.