செய்திகள்
தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டியில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-01-13 05:50 GMT   |   Update On 2021-01-13 05:50 GMT
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொம்மிடி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீத். இவருடைய மகள் அப்ரோஸ் (வயது 25), என்ஜினீயர். இவருக்கும், சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த யாசர் அராபத் (28) என்பவருக்கும் கடந்த 1¼ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது, அப்ரோஸ் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு பிரசவத்திற்காக வந்தார். இதையடுத்து அவருக்கு பெண் குழந்தை பிறந்து தற்போது 4 மாதங்கள் ஆகிறது.

இதனிடையே நேற்று முன்தினம் மாலை அப்ரோஸ் திடீரென்று தனது தந்தையின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று அப்ரோஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதே நேரத்தில் திருமணம் ஆகி 1¼ ஆண்டுகளே ஆவதால் அப்ரோஸின் தற்கொலை குறித்து, அரூர் உதவி கலெக்டர் பிரதாப் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News