செய்திகள்
கோப்புபடம்

உழவர் தினம் முதல் நீரா பானம் விற்பனை தொடக்கம் - உற்பத்தியாளர் நிறுவனம் அறிவிப்பு

Published On 2021-10-15 07:51 GMT   |   Update On 2021-10-15 07:51 GMT
உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்கிய ஓராண்டில், 1,200 பங்குதாரர்கள் இணைந்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இயக்குனர் சக்திவேல் தலைமை வகித்தார்.

விழாவில் நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் பேசியதாவது:

உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்கிய ஓராண்டில், 1,200 பங்குதாரர்கள் இணைந்துள்ளனர். தென்னையில் இருந்து பெறப்படும் சுத்தமான பானம் என்பதால் இதற்கு ‘தென் நீரா’ என பெயரிடப்பட்டுள்ளது.

’நீரா’வை 6 மாதம் வரை பயன்படுத்தலாம் என மத்திய அரசு நிறுவனம் சான்றளித்துள்ளது. ஏற்றுமதி முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீரா பானம் விற்பனையை உழவர் தினத்துன்று துவங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். 
Tags:    

Similar News