செய்திகள்
தமிழக கவர்னருக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
உயர்ந்த பாரம்பரியம் கொண்ட எங்களது புகழ்பெற்ற மாநிலத்துக்கு கவர்னராக வந்துள்ள தங்களை அ.தி.மு.க. சார்பில் மனதார வரவேற்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றுள்ளார். அவருக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
தமிழக கவர்னராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். சிறந்த வரலாறு மற்றும் உயர்ந்த பாரம்பரியம் கொண்ட எங்களது புகழ் பெற்ற மாநிலத்துக்கு கவர்னராக வந்துள்ள தங்களை அ.தி.மு.க. சார்பில் மனதார வரவேற்கிறேன். தங்கள் உதவியால் தமிழ்நாடு உயர்நிலைக்கு செல்லும்.
தங்கள் பதவி ஏற்பு விழாவில் நான் பங்கேற்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இன்னும் சில தினங்களில் சென்னை திரும்பியதும் தங்களை சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்றுள்ளார். அவருக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
தமிழக கவர்னராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். சிறந்த வரலாறு மற்றும் உயர்ந்த பாரம்பரியம் கொண்ட எங்களது புகழ் பெற்ற மாநிலத்துக்கு கவர்னராக வந்துள்ள தங்களை அ.தி.மு.க. சார்பில் மனதார வரவேற்கிறேன். தங்கள் உதவியால் தமிழ்நாடு உயர்நிலைக்கு செல்லும்.
தங்கள் பதவி ஏற்பு விழாவில் நான் பங்கேற்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இன்னும் சில தினங்களில் சென்னை திரும்பியதும் தங்களை சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.