செய்திகள்
தற்கொலை

காதலியுடன் செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் சென்னை ஊழியர் தற்கொலை

Published On 2021-11-23 07:38 GMT   |   Update On 2021-11-23 07:38 GMT
களக்காடு அருகே காதலியுடன் செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேலபத்தை கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் செல்வபசுபதி (வயது19).

இவர் ஐ.டி.ஐ.படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். பசுபதி ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர்.

இதில் மனமுடைந்த செல்வ பசுபதி நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் அவரை காணாமல் தேடிய பெற்றோர், அவர் கிணற்றில் பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News