வேதாரண்யம் அருகே முதியவர் கம்பியால் அடித்துக் கொலை
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கடினல்வயல் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58). விவசாய தொழிலாளி. இவர் கடந்த 5ந்தேதி குடும்ப பிரச்சனையால் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். அப்போது அருகில் உள்ள கடையில் நின்றிருந்தபோது மனோகரனுக்கும், அதே ஊரை சேர்ந்த திரவியம், தமிழ்ச்செல்வம் ஆகியோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த இருவரும் மனோகரனை கம்பியால் தாக்கி உள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட மனோகரன் கருப்பம்புலம் மற்றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகரன் நேற்று இறந்தார். இதுகுறித்து மனோகரின் சகோதரர் பாலகிருஷ்ணன் (70) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சரக காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் மேல் விசாரணை செய்து வருகிறார்.