செய்திகள்
கோப்புபடம்

விழுப்புரம் அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை

Published On 2021-04-05 08:39 GMT   |   Update On 2021-04-05 08:39 GMT
விழுப்புரம் அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லை அடுத்த மொரட்டாண்டியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 49), ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கம் உள்ள இவர், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். 

உடனே அவரை குடும்பத்தினர் காப்பாற்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சுகுமார் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News