செய்திகள்
மாவோயிஸ்ட்

குடும்பத்தில் ஒருவர் போலீஸ்.. ஒருவர் மாவோயிஸ்ட்.. -பாச போராட்டம்

Published On 2019-08-13 06:39 GMT   |   Update On 2019-08-13 06:39 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் ஒருவர் போலீசாகவும், மற்றொருவர் மாவோயிஸ்டாகவும் இருந்து நேருக்கு நேர் மோதியுள்ளனர்.
சுக்மா:

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா பகுதியைச் சேர்ந்தவர் வெட்டி ராமா. இவர் அங்கேயே போலீசாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், அப்பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

அப்போது ராமாவுக்கு எதிராக நின்ற மாவோயிஸ்டுகளுள், ஒரு மாவோயிஸ்டாக அவரது தங்கை வெட்டி கன்னியும் நின்றுள்ளார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.



இதில் வெட்டி கன்னி எப்படியோ தப்பித்துவிட்டார். இது குறித்து வெட்டி ராமா கூறுகையில், ‘நாங்கள் இருவருமே மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள்தான். ஆனால், மனமாற்றத்தால் சில காலம் கழித்து நான் போலீசாக மாறிவிட்டேன்.

என் தங்கை கன்னியை நான் பலமுறை திரும்ப வந்துவிடுமாறு கடிதம் எழுதி அனுப்பினேன். ஆனால், இன்னும் வந்தபாடில்லை. தொடர்ந்து மாவோயிஸ்டாக தன் வாழ்க்கையை போராட்டமாகவே நடத்திக் கொண்டிருக்கிறாள்.

என் எதிரில் நின்று ஒரு மாவோயிஸ்டாக செயல்பட்டபோது எனக்கு கடினமாகவே இருந்தது. இது மிகுந்த மன வேதனையாக உள்ளது’ என கூறியுள்ளார்.



Tags:    

Similar News