செய்திகள்
கொள்ளை

திங்களூரில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம்-செல்போன்கள் கொள்ளை

Published On 2021-10-23 08:18 GMT   |   Update On 2021-10-23 08:18 GMT
திங்களூரில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம்-செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஜீவா செட் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 48). இவர் திங்களூர் அடுத்த கிரே நகர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் இரவு வேலை முடிந்து டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு கடையில் வசூலான பணத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். திங்களூர் அடுத்த பெரிய வீரசங்கிலி அருகே ஒரு கோழிபண்ணை வழியாக வந்து கொண்டு இருந்தார்.

அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து அவரை வழி மறித்து கத்தியை காட்டி அவர் வைத்து இருக்கும் பணத்தை கேட்டு மிரட்டினர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியால் அவர் முதுகில் குத்த முயன்றனர். இதை தடுத்ததால் செல்வராஜிக்கு முதுகில் லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் 2 பேர் செல்வராஜ் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணம், 2 செல்போன்கள் மற்றும் 6 ஏ.டி.எம். கார்டுகளை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து செல்வராஜ் திங்களூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News