செய்திகள்
அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலி
அரக்கோணம் அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஜனார்த்தனன் (வயது 17). 10-ம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இவர் தங்கள் விவசாய நிலத்திற்கு வெளிச்சம் வேண்டி அருகில் இருந்த மின்கம்பத்தில் பல்ப் பொருத்துவதற்காக மின் கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.