ஆன்மிகம்
மாங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

முதலியார்பேட்டை மாங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

Published On 2021-02-08 04:12 GMT   |   Update On 2021-02-08 04:12 GMT
முதலியார்பேட்டை மாங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
முதலியார்பேட்டை மாங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விழா நேற்று முன்தினம் காலை விக்னே‌‌ஷ்வர பூஜையுடன் தொடங்கியது. மாலை 5 மணிக்கு முதல் யாக பூஜை நடந்தது. நேற்று காலை 2-ம் கால யாக பூஜையும், மாலையில் 3-வது யாக பூஜையும் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4-ம் கால யாக பூஜையும், தீபாராதனையும், தொடர்ந்து கலச புறப்பாடும் நடைபெற உள்ளது. விழாவில் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும், மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், மாலையில் அம்மன் வீதிஉலாவும் நடைபெற உள்ளது.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, பாஸ்கர் எம்.எல்.ஏ., இந்து அறநிலைய துறை செயலாளர் மகே‌‌ஷ், ஆணையர் சிவசங்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News