ஆன்மிகம்
வெள்ளை விநாயகர் கோவில் சதுர்த்தி விழாவில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம்

வெள்ளை விநாயகர் கோவில் சதுர்த்தி விழாவில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம்

Published On 2021-09-07 05:49 GMT   |   Update On 2021-09-07 05:49 GMT
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவிலில் 10-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேவேந்திரன் பூஜையும், மாலை மூஷிக வாகனத்தில் சாமி புறப்பாடும் நடக்கிறது.
சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் என அழைக்கப்படும் சுவேத விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வருகிற 11-ந் தேதி(சனிக்கிழமை) வரை விழா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5-ம் நாள் விழாவாக

பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மேலும் அஸ்திரதேவர் உட்புற புறப்பாடு நடைபெற்றது. நாளை(புதன்கிழமை) திருக்கல்யாணமும், 10-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேவேந்திரன் பூஜையும், மாலை மூஷிக வாகனத்தில் சாமி புறப்பாடும் நடக்கிறது.

தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக விநாயகர் சதுர்த்தி நாளில் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News