உள்ளூர் செய்திகள்
வேலூரில் கொரோனா பாதிப்பு குறைந்தது
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்து வருகிறது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதுவரை 56,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,573 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,159 பேர் பலியானார்கள். தற்போது 1,586 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 77 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 400-க்கு மேல் இருந்தது. படிப்படியாக குறைந்து வந்த பாதிப்பு இன்று அதிரடியாக 100-க்கு கீழ் குறைந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று 247 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் தொற்று பரவல் குறைந்துள்ளது.
தற்போது குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 96 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.