செய்திகள்
முககவசம் அணியாத 149 பேருக்கு அபராதம்
முத்துப்பேட்டை, நன்னிலத்தில் முககவசம் அணியாத 149 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று 2-வது நாளாக பேரூராட்சி அலுவலகம் வாசலில் பேரூராட்சி செயல் அலுவலர் தேவராஜ் தலைமையில் பணியாளர்கள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்த 130 பேருக்கு மொத்தம் ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதே போல் நன்னிலம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் விஸ்வநாதன், நன்னிலம் தாசில்தார் மணிவண்ணன் ஆகியோர் அச்சுதமங்கலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்த 19 பேருக்கு மொத்தம் ரூ.3,800 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது சுகாதார ஆய்வாளர் ஜோதி, ஊராட்சி மன்ற தலைவர் ருக்மணி மற்றும் ஊராட்சி செயலர் உடனிருந்தனர்.