செய்திகள்
வசந்தகுமார் எம்பி

தேர்தல் விதிமீறல்: வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Published On 2019-10-21 12:24 GMT   |   Update On 2019-10-21 12:24 GMT
தேர்தல் விதிமீறல் தொடர்பாக காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாங்குநேரி:

தமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் இன்று (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற்றது.

நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.), தி.மு.க. கூட்டணி சார்பில் ரூபி மனோகரன் (காங்கிரஸ்), ராஜ்நாராயணன் (நாம் தமிழர்) உள்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்செல்வன், தி.மு.க. சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உள்பட 12 பேர் போட்டியிட்டனர்.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையேயும், விக்கிரவாண்டியில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், தேர்தல் விதியை மீறி தொகுதிக்குள் நுழைந்ததாக காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தேர்தல் அதிகாரி ஜான் கேப்ரியல் கொடுத்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அநாவசியமாக கூட்டம் கூட்டுதல், சம்பந்தமில்லாத நபர் தொகுதிக்குள் நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News