செய்திகள்
சங்கராபுரம் அருகே பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை
சங்கராபுரம் அருகே பள்ளி ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 29). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனா நோயால் கோவிந்தம்மாள் பாதிக்கப்பட்டார். இதையடுத்து உரிய சிகிச்சை பெற்று கொரோனா தொற்றில் இருந்து மீண்டார்.
இ்ந்த நிலையில் அவருக்கு அடிக்கடி கை, கால், கழுத்து உள்ளிட்ட பகுதியில் அதிக அளவில் வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த அவர் விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையி்ல் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கோவிந்தம்மாள் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.