ஆன்மிகம்
மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி தலைமையில் சன்னிதானத்தில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்த படம்.

சபரிமலையில் களபாபிஷேக ஊர்வலம்

Published On 2021-08-19 05:32 GMT   |   Update On 2021-08-19 05:32 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி தலைமையில் சன்னிதானத்தில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது..
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக 15-ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பூஜை நடந்து வருகிறது. நாட்டில் வேளாண் பணிகள் மேம்பாடு அடையவும், நெற்கதிர் அறுவடை செழித்தோங்கவும் 17-ம் தேதி நிறை புத்தரிசி பூஜை நடந்தது.

நேற்று மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி தலைமையில் சன்னிதானத்தில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

21-ந் தேதி திருவோண விழா சிறப்பு பூஜை வழிபாடுகள் நடக்கும்.

அன்றைய தினம் பக்தர்களுக்கு ஓண விருந்து (சத்யா) திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும். ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை 23-ந் தேதி இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.

Tags:    

Similar News