ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி தலைமையில் சன்னிதானத்தில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது..
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக 15-ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பூஜை நடந்து வருகிறது. நாட்டில் வேளாண் பணிகள் மேம்பாடு அடையவும், நெற்கதிர் அறுவடை செழித்தோங்கவும் 17-ம் தேதி நிறை புத்தரிசி பூஜை நடந்தது.
நேற்று மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி தலைமையில் சன்னிதானத்தில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
21-ந் தேதி திருவோண விழா சிறப்பு பூஜை வழிபாடுகள் நடக்கும்.
அன்றைய தினம் பக்தர்களுக்கு ஓண விருந்து (சத்யா) திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும். ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை 23-ந் தேதி இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.
நேற்று மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி தலைமையில் சன்னிதானத்தில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
21-ந் தேதி திருவோண விழா சிறப்பு பூஜை வழிபாடுகள் நடக்கும்.
அன்றைய தினம் பக்தர்களுக்கு ஓண விருந்து (சத்யா) திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும். ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை 23-ந் தேதி இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.