செய்திகள்
ஜேபி நட்டா

நான்கு மாநிலங்களில் எங்கள் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: ஜேபி் நட்டா

Published On 2021-04-04 12:36 GMT   |   Update On 2021-04-04 12:36 GMT
கேரளாவைத் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் எங்கள் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என பா.ஜனதா தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் பணி நடைபெற்ற வருகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவிற்கு நாளை மறுதினம் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. அசாமில் இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் கடைசி கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடக்கிறது.

மேற்கு வங்காளத்தில் 3-ம் கட்ட தேர்தல் நடக்கிறது. இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜேபி நட்டா சென்னையில் இன்று பேட்டியளித்தார்.

அப்போது ஜேபி நட்டா கூறுகையில் ‘‘தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான நாங்கள் அரசு அமைப்போம். மேற்கு வங்காளத்தில் நாங்கள்தான் வெற்றியை நோக்கி செல்கிறோம் என்பதை இரண்டு கட்ட தேர்தல்கள் தெளிவாக காண்பித்துள்ளது.

அசாமில் எங்கள் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும். புதுச்சேரியில் ஆட்சியமைப்போம் என்பது தெள்ளத்தெளிவாக உருவாகியுள்ளது. கேரளாவில், நாங்கள் ஒரு வல்லமைமிக்க சக்தியாக இருப்போம்.

கேரளாவில் மக்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கவிட்டனர். இதனால் கேரளவில் சிறந்த விளங்குவோம்’’ என்றார்.
Tags:    

Similar News